Christmas Celebration

ஜெயப்பிரியா கல்வி குழுமத்தின் கிரீன் பார்க் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.

          பள்ளி தாளாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் தலைமை ஏற்க, டைரக்டர் திரு. தினேஷ் அவர்கள் முன்னிலையில் நடந்தது.  

          சபைக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் ரோஷினி ,மகி கீர்த்தனா , குரு பிரகாஷ் ஆகியோர் பரத நாட்டியம் ஆடினர். "தேவர்கள் துதிக்க பாவங்களை மீட்க வந்த பரமனவன் " பிறந்த கதையை பள்ளி மாணவிகள் அழகாக நடித்து காட்டினர். 

         கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் பள்ளியின்  1, 2 ,3 ஆம் வகுப்பு மாணவிகள் நடனமாடி தெரிவித்தனர். "மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை" போற்றி பள்ளியின் 4,5 ஆம் வகுப்பு மாணவிகள் பாடல் பாடினர்.  

         மனதை இதமாக்கி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் அழகான கிறிஸ்துமஸ் நடனமாடினர் .

          8,9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் இயேசு பிறப்பு பற்றிய நாடகத்தை நடத்தினர். "அன்பின் 

திருவுருவமான சாண்டா கிளாஸ்" குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் இனிப்புகள் வழங்கி அனைத்து குழந்தைகளையும் மகிழ்விக்கும் வகையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். 

           பள்ளியின் ஆசிரியர்கள் இயேசுகிறிஸ்து பிறப்பின் பாடலை பாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிறைவாக பள்ளியின் முதல்வர் திருமதி. இந்திரலீலா அவர்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு சொற்பொழிவையும், வாழ்த்துக்களையும் வழங்கினார்.

           மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியை  கொ.அமிழ்தினி , இ.டி. அனன்யா  ஆகிய மாணவிகள் நிகழ்ச்சி நிரல்களை தொகுத்து வழங்கி பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்து இனிதே  நிறைவு செய்தனர்.